TamilsGuide

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

யாழ்., பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் இன்று வடமாகாண ஆளுநர், பி.எஸ்.எம். சார்ள்ஸினால் திறந்து வைக்கப்பட்டது.

வடமாகாண ஆளுநர், பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வட மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், விமான நிலைய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த தொடர்பு நிலையத்தில், வடமாகாணத்தில் சுற்றுலாப் பயணிகள் இலகுவாக பயணிக்க கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், வழிபாட்டு தளங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய சுற்றுலா வழிகாட்டி கையேடுகளை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்பது விசேட அம்சமாகும்.

அத்தோடு, வடக்கில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment