• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கல்முனை பிரதேச செயலக நுழைவாயில் கதவைப் பூட்டிப் போராட்டம்

இலங்கை

கல்முனை வடக்கு பிரதேச செயலக  நுழைவாயில் கதவைப்  பூட்டி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும்  தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 91 நாட்களாக அமைதி வழியில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் 92 ஆவது நாளாகிய இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக குவிந்த மக்கள்  செயலகத்தின் நுழைவாயிலை பூட்டி அதிகாரிகளை உள்நுழைய விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தமக்கு அதிகாரிகள் உரிய தீர்வைப்   பெற்றுத் தரவேண்டும்  எனக் கோஷமிட்டும் பதாதைகளை தாங்கியவண்ணம் போராட்டத்தினை முன்னெடுத்த போராட்டக்காரர்கள், தாம் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply