TamilsGuide

புதிய தோற்றத்தில் சசிகுமார்

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களான பாலா, அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சசிகுமார். தொடர்ந்து சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கியதுடன் படத்தின் கதாநாயகனாக நடித்தார். படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

நாடோடிகள், ஈசன், சுந்தரபாண்டியன், கொடி வீரன் உள்பட பல பலபடங்களில் நடித்துள்ளார். பெரும்பாலான படங்களில் கிராமத்து தோற்றத்தில்தான் சசிகுமார் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கருடன் படத்திலும் கிராமத்து கோவில் சொத்தை பாதுகாக்க போராடும் காட்சிகளில் அவரது கதாபாத்திரம் பேசப்படும் வகையில் அமைந்தது.

இந்நிலையில் சசிகுமார் திடீரென முற்றிலும் புதிய தோற்றத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு சமூக வலைதளத்தில் அவர் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சசிகுமாரின் அடுத்த படத்துக்கான தோற்றமா? என வலைதளத்தில் ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a comment

Comment