TamilsGuide

கப்பலில் நடந்த அம்பானி விருந்தில் ஜான்விகபூர்

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சென்ட் திருமணம் ஜூலை 12-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருமணத்திற்கு முன்னோட்ட நிகழ்ச்சிகள் குஜராத் ஜாம்ஷெட்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோலாகலமாக நடந்தது. இதில் இந்திய திரை உலகினர் அனைவருமே பங்கேற்றனர்.

இந்நிலையில் திருமணத்தின் 2-வது முந்தைய விருந்து இத்தாலி, பிரான்ஸ் கப்பலில் வைத்து நடந்தது. இதில் திரை உலக பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். விருந்தில் பங்கேற்ற ஜான்விகபூர் அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விருந்து நிகழ்ச்சியில் ஜான்விகபூர் காதலன் ஷிகர் பகாரியாவுடன் நடந்து வருவது மற்றும் கடற்கரை அழகை ரசிப்பது என அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மே 29-ந் தேதி 800 விருந்தினர்கள் இத்தாலியில் இருந்து பிரான்சின் தெற்கே 4380 கிலோ மீட்டர் தூரம் சென்று விருந்து நிகழ்ச்சியை கொண்டாடினர். மே 29-ந் தேதி தொடங்கிய விருந்து ஜூன் 1-ந் தேதி இத்தாலி போர்டோ பினாவில் நிறைவடைந்தது.
 

Leave a comment

Comment