TamilsGuide

யாழில் பசுவதைக்கு எதிராக போராட்டம்

பசுவதைக்கு எதிராக யாழில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நல்லை ஆதீனத்திற்கு முன்பாக நேற்று சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், நாக விகாரை விகாராதிபதி, தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் உள்ளிட்டவர்களுடன் சிவசேனை அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பசுவதைக்கு எதிரான பல்வேறு வாசகங்களை ஏந்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
 

Leave a comment

Comment