TamilsGuide

மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பான புதிய விசாரணை

மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ .தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பௌத்த மதம் உள்ளிட்ட பிற மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்து சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசன சட்டத்தின் கீழ் வழக்கு தொடர உத்தரவிடுமாறு கோரி அனைத்து மத தலைவர்களாலும் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு வந்த நிலாயில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment