TamilsGuide

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் விவசாயிகள் அரசர்களாக மாற்றப்படுவார்கள் – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தேசிய விவசாயக் கொள்கை உருவாக்கப்பட்டு, விவசாயிகள் நாட்டின் அரசர்களாக மாற்றப்படுவார்கள் என அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாயப் பிரகடனத்தை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நம்பகமான நீர்ப்பாசன கட்டமைப்பொன்று இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், காணி, காணி அபிவிருத்தி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி அபிவிருத்தி போன்ற அமைச்சுக்களை ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், புதிய தொழில்நுட்பம் மற்றும் இணையதள வசதிகளை பயன்படுத்தி அனைத்து விவசாய மையங்களும் சந்தையையும் உற்பத்தியாளரையும் இணைக்கும் திட்டத்தை ஆரம்பிப்போம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

அதேநேரம், பங்களிப்பு ஓய்வூதிய முறையின் மூலம் விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை தமது ஆட்சியில் செயல்படுத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment