TamilsGuide

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொள்ளைச் சம்பவம்

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக அப்பகுதியில் வீடுகள் உடைப்பு, கால்நடை கடத்தல்கள், தலைக்கவசம் இன்றி பயணித்தல்  போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேசமயம் கல்முனை சாய்ந்தமருது காரைதீவு பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் மண் கடத்தல் இடம்பெறுவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடத்தல்கள் மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்கு இராணுவத்தினர் கடற்படையினரின் வீதி ரோந்து நடவடிக்கையினை கடினமாக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment