கனடா தேசிய பல்லின அச்சக, ஊடக சங்கத்தினால் ரொறண்டோ மாநகர சபை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒருவார கால ஊடக கண்காட்சி திங்கட்கிழமையன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்ப இவ்வைபவத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட மேயர் றொப் போட், முன்னாள் மேயர் பாபரா ஹோல், லிபரல் எம்.பி.ஜிம் காரி யியானிஸ் ஆகியோருட்பட மற்றும் ஒன்ராறியோ அமைச்சர்கள், எம்.பி.பி.க்கள் ஆகி யோரை மேற்படி சங்கத்தின் தலைவர் தோமஸ் சாராஸ் பாராட்டுப் பத்திரங்களை வழங்கிக் கௌரவித்தார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியன தனித்தினயாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழர்களின் வெளியீடுகளான கதிர் ஒளி, செந்தாமரை, உதயன், மொன்சூன் ஜேர்னல், தூறல் ஆகியனவற்றினையும், ஒன்ராறியோ குடிவரவு, பிரஜாவுரிமை அமைச்சர் சார்ள்ஸ் சூசாவுக்கு தோமஸ் சாராஸ் பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவிப்பதையும் படங்களில் காணலாம். இப்படத்தில் இந்தியரான மிசிசாகா கிழக்கு கூக்வில்ஸ் எம்.பி.பி. தீபிகா டமேர்ளாவும் காணப்படுகின்றார்.
பத்திரிக்கை சுதந்திர வாரத்தை குறிக்கும் விதமாக மாநகர சபை மண்டபத்தில் நேற்று முந்தினம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றில் றொப் போர்ட்டுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
கனடா தேசிய பல்லின அச்சக, ஊடக சங்கத்தினால் ரொறண்டோ மாநகர சபை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒருவார கால ஊடக கண்காட்சி திங்கட்கிழமையன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்ப இவ்வைபவத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட மேயர் றொப் போட், முன்னாள் மேயர் பாபரா ஹோல், லிபரல் எம்.பி.ஜிம் காரி யியானிஸ் ஆகியோருட்பட மற்றும் ஒன்ராறியோ அமைச்சர்கள், எம்.பி.பி.க்கள் ஆகி யோரை மேற்படி சங்கத்தின் தலைவர் தோமஸ் சாராஸ் பாராட்டுப் பத்திரங்களை வழங்கிக் கௌரவித்தார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியன தனித்தினயாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழர்களின் வெளியீடுகளான கதிர் ஒளி, செந்தாமரை, உதயன், மொன்சூன் ஜேர்னல், தூறல் ஆகியனவற்றினையும், ஒன்ராறியோ குடிவரவு, பிரஜாவுரிமை அமைச்சர் சார்ள்ஸ் சூசாவுக்கு தோமஸ் சாராஸ் பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவிப்பதையும் படங்களில் காணலாம். இப்படத்தில் இந்தியரான மிசிசாகா கிழக்கு கூக்வில்ஸ் எம்.பி.பி. தீபிகா டமேர்ளாவும் காணப்படுகின்றார்.
பத்திரிக்கை சுதந்திர வாரத்தை குறிக்கும் விதமாக மாநகர சபை மண்டபத்தில் நேற்று முந்தினம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றில் றொப் போர்ட்டுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது